Tuesday, November 22, 2011

ஏன்?


உன்னோடு சண்டையிட்டு, பிறகு
சமாதனம் சொல்லி கட்டி அழும்போது
இருக்கும் இன்பம்,
உன்னோடு சிரித்துப்
பேசும்போது கூட
இருப்பதில்லையே ஏன்?

பெருமூச்சு



எதை பார்த்து இப்படி உனக்கு பெருமூச்சு?
சன்னலுக்கு வியர்த்துவிட்டது.!!

சுகம்


உன் பெருமூச்சில் காற்று உணர்ந்திருக்கும்
தென்றலின் சுகத்தை. 

Monday, November 21, 2011

அவசியமற்றுப்போனது


புத்தக பரிசளிப்பில் அன்புடன் என்று எழுதி
உன் பெயரையும் எழுதி தந்து சென்றாய்..
உன் பெயர் தவிர
மற்றவை சுவார(அவ)சியமற்றுப்போனது.. 

நீ


சூரியனை சுற்றியதை காட்டிலும்
பூமி உன்னையே
அதிகம் சுற்றியிருக்கும்.  

ஏதாவது?



உன்
சிரிப்போ, சாபமோ, கோபமோ
ஏதாவதொன்றில்
ஏதுமற்றதும்
எதவதாகிவிடுகிறது..
என்னைபோலவே..

கோலங்கள்


புற்கள் மீது நீ போட்ட கோலங்கள்
பூக்களாய் பூத்திருகிறது..

ஈரம்

நீ குளித்தபின் காற்றிடம்
கெஞ்சிகொண்டிருக்கிறது கூந்தலின் ஈரம்
உலர்த்தி விடாதே என்று..

என்னவென்று சொல்வது?


உயிரைக் கொன்று சதை தின்பதை
மாமிசபட்சினி என்றால்,
உயிரை தின்னும் உன்னை
என்னவென்று சொல்வது?

நீ...



சபிக்கபட்ட காதலிடம் இருந்து மோட்சம் கொடுத்தாய் நீ...


நீரூற்று உன் பெயரூற்றி போகிறது...


புள்ளியாக்கபட்ட என் பிம்பத்தின் இறுதி நீ...

சாரல்


மேகம் கொஞ்சிபோனது
உன்னை,
சாரலால். 

பார்வை.



இனிக்க இனிக்க
மிளகாய் தருகிறது
உன் பார்வை.

Thursday, November 17, 2011

மழை


மேகம் அட்சதை தூவி நடத்துகிறது
நம் திருமணத்தை..

Wednesday, November 2, 2011

துளி

மழையின் 
ஒவ்வொரு துளியும் 
உன்னை பருகவே விழுகிறது..

உனக்காய் நான்

உனக்காய்
படைக்கப்பட்டவைகளில் 
முதலாமவன் நான்..

Tuesday, November 1, 2011

வெகுளி

நான் தெரிந்தே உன்மேல் மோத..
நீ தெரியாமல் மோத..
வெகுளியாய் விழித்துக்கொண்டது 
காதல், உன் முகத்தில்..

கட்டிகொள்

கட்டிகொள்.. 
மழை, மேகங்களை 
நனைக்காமல் இருக்கட்டும்..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.