Thursday, June 21, 2012

ஐயோ..

முதன்முதலாய் உன்னை சேலையில் பார்த்தேன்..

ஐயோ..
ஏன்  இந்த சேலை இப்படி உன்னை சுற்றி சுற்றி கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறது?

என்னவென்று சொல்ல?


என்னை துளித்துளியாய் பருகுவதும்  நீதான்..
என் மேல் மழையாய் பொழிவதும் நீதான்..
உன்னை என்னவென்று சொல்ல?

அடக்கடவுளே.


கோவிலில் உன்னிடம் தன் பெயரை
அர்ச்சனை செய்ய சொல்லி
அடம் பிடிக்கிறது சாமி..


Friday, June 15, 2012

வன்மையாக கண்டிக்கிறேன்


பார்வையில் அணு ஆயதம்
புன்னகையில் அமில ஆயுதம்
இப்படி என்னுள் நீ நிகழ்த்தும்
படுகொலைகள் ஏராளம்..

இதை கண்டுகொள்ளாத உலக நாடுகளை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!

தேவதை


சிறு வயதில் பள்ளி விழாவில் தேவதை வேடமிட்டாய்..

சரி..

இன்னுமா வேடத்தை கலைக்காமலிருக்கிறாய் ?

மந்திரம்



யாரிடம் கற்றாய்  இந்த முத்த மந்திரத்தை? 

என்னுள்



வானொலி அறிவிப்பாளரின் குரல் போல்
வேகமாய் சென்று விடுகிறாய்.
காதல் தொடர்ந்து என்னுள்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது..

வகுப்பறை


வகுப்பறையில் மேசைகளும்
கரும்பலகையும் படிப்பதென்னவோ
உன்னைத்தான்.

Thursday, June 7, 2012

கவிதை


அநேகமாக நடக்க தெரிந்த கவிதை நீயாகத்தான் இருப்பாய்..

இன்னும் எத்தனை கவிதைகளைத்தான் உன்னுள் தேக்கி வைத்திருக்கிறாய்?

Wednesday, June 6, 2012

பூக்கள்

பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..



Monday, June 4, 2012

உதடுகள்


ஒரு சொல் கவிதையின் இரு பகுதிகள்
உன் உதடுகள்..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.