Thursday, June 21, 2012

ஐயோ..

முதன்முதலாய் உன்னை சேலையில் பார்த்தேன்..

ஐயோ..
ஏன்  இந்த சேலை இப்படி உன்னை சுற்றி சுற்றி கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறது?

என்னவென்று சொல்ல?


என்னை துளித்துளியாய் பருகுவதும்  நீதான்..
என் மேல் மழையாய் பொழிவதும் நீதான்..
உன்னை என்னவென்று சொல்ல?

அடக்கடவுளே.


கோவிலில் உன்னிடம் தன் பெயரை
அர்ச்சனை செய்ய சொல்லி
அடம் பிடிக்கிறது சாமி..


Friday, June 15, 2012

வன்மையாக கண்டிக்கிறேன்


பார்வையில் அணு ஆயதம்
புன்னகையில் அமில ஆயுதம்
இப்படி என்னுள் நீ நிகழ்த்தும்
படுகொலைகள் ஏராளம்..

இதை கண்டுகொள்ளாத உலக நாடுகளை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.