Tuesday, September 17, 2013
Saturday, June 29, 2013
பாட்டி சொல்லாத கதை.
தப்பு பண்ணினா சாமி கண்ண குத்தும்
என சொல்லி கொடுத்த பாட்டி
காதலித்தால், தேவதை
மனசை குத்தும் என சொல்லிகொடுக்கவில்லை.
Labels:
கவிதைகள்,
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
சாப்பிட்டியா?
எப்படி பசிப்பது அலுத்துப் போகவில்லையோ
அதுபோல்தான் "சாப்பிட்டியா?" என
தினமும் நீ கேட்பதும் அலுத்துப்போவதில்லை..
Labels:
கவிதைகள்,
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
Sunday, May 12, 2013
Wednesday, May 8, 2013
நீ
கதவை உடைத்து உள்ளே வந்து களவாடுபவனைக் கேள்விபட்டிருக்கிறேன்.
மொத்தமாய் களவாடிவிட்டு பின்னர் உள்ளே வந்து என்னை
கன்னா பின்னாவென்று உடைக்கிறாயே
உன்னை யாரென்று சொல்ல?
உலகம் பெரிதுதான்.
இன்னும் என்னால்
உன்னை கடக்க முடியவில்லை.
Labels:
கவிதை,
காதல்,
காதல் கவிதை.,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
Friday, May 3, 2013
முத்தம்.
உன்னுடனான சண்டைகளில்
நான் வெல்லும் பரிசுகள்
கடி,
கிள்ளல்,
நகக்கீறல்
இறுதியாய் நிச்சய பரிசாக முத்தம்.
Labels:
காதல்,
காதல் கவிதை.,
தமிழ் கவிதைகள்.
பிரிவு
ஒவ்வொரு நாளும் உனை காணும் வரை
எனை சுட்டுக்கொண்டேயிருக்கும்
முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது
"டேய்... போகனுமா?" என்று
நீ என்மேல் சிந்திய கண்ணீர்த்துளி...
Labels:
கவிதை,
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
Tuesday, March 26, 2013
Friday, February 15, 2013
Tuesday, February 5, 2013
Monday, January 21, 2013
Friday, January 18, 2013
மறுபிறவி
என்று என்னை கிள்ளி கிள்ளி
சண்டையிட்டு உயிர்பிக்கிறாய்..
முத்தங்களால் சாகடித்து
ஸ்பரிசங்களால் உயிர்பிக்கிறாய்..
Labels:
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
Wednesday, January 16, 2013
முத்தம்
இதுதான் கடைசி கைப்பிடி சோறு என்று சொல்லி
குழந்தையை சாப்பிடவைப்பதுபோல
உன்னிடம் ஒவ்வொரு முறையும்
இதுதான் கடைசி முத்தம்
என சொல்ல வேண்டியதாகிறது..
Labels:
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
Sunday, January 13, 2013
முத்தம்
எனக்கும் நிறுத்திக்கொள்ள ஆசைதான்
ஆனால் எவ்வளவு கொடுத்தும்
உன் கன்னங்கள்தான் நிரம்ப மறுக்கிறது
என் முத்தங்களால்..
Labels:
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
Saturday, January 12, 2013
காதல்
உன்னை பார்க்கும் போது
உள்ளேயே இரு என்று மிரட்டி பார்க்கிறேன்..
நீ இல்லாத போது ச்சீ தள்ளி போ என விரட்டி பார்க்கிறேன்
ம்ம்..ம்.. இந்த காதல் கேட்க மாட்டேன்கிறதே..
Labels:
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
Thursday, January 10, 2013
Subscribe to:
Posts (Atom)