Friday, August 31, 2012

ஏன்?


படிகளில் வேகமாய் ஏறி வந்து
மேல் மூச் கீழ் மூச்சு வாங்குகிறேன் என்கிற பெயரில்
ஏன்  என் உயிரை வாங்குகிறாய்?

Monday, August 27, 2012

ஒரே ஒரு முறை


எப்படி அந்த நோட்டு புத்தகம்
 உன்னை எதுவும் செய்யவில்லையோ
அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன்

ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்...

Saturday, August 18, 2012

நியாயமா?

பூங்காவில் அமர்ந்திருந்தோம்..

மரங்கள் பூக்களை தூவியது உன்மேல்.
புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. 
எறும்புகள்கூட உன் மீது விழுந்தே  ஊறி சென்றது..

"ம்.. சும்மா இரு." என்று என் கைகளை மட்டும் 
தட்டி விடுகிறாயே..
நியாயமா?  




எதை வீசி  எனை ஆட்டமிழக்கச் செய்தாய்?     

       

Thursday, August 9, 2012

கோவில் யானை


கொழுப்புதான் இந்த கோவில் யானைக்கு..

எல்லோரையும் ஆசிர்வாதம் செய்துவிட்டு
உன்னைமட்டும் முத்தமிடுகிறது..   
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.