Friday, July 27, 2012

அராஜகம்


ஆயிரம் முத்தங்களை வாங்கிக்கொண்டு
ஒரே ஒரு முத்தத்தை மட்டும் திருப்பி தந்துவிட்டு
 "ம்  அவ்வளவுதான்"  என்று சொல்லி 
அராஜகம் செய்யும் உன்னைபற்றி
 யாரிடம் புகார் செய்வேன்..

நீ நான்



என்னில் நீ ஏற்படுத்திய சுழலில்
என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும்
வினோத நதி நான்..
       
          **************
நிலவு பொழியும் மழை நீ.

Wednesday, July 18, 2012

அழைக்கமாட்டாயா?


வரமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையை கொஞ்சி கெஞ்சி என எப்படியெல்லாமோ அழைக்கிறாய்..

அழைக்கமாட்டாயா என காத்துகிடக்கிறேன்
கண்டுகொள்ளமாட்டேன்கிறாயே.. 

வெட்கம்


வெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும்
கடித்துக்கொள்கிறாய்?
உனக்கு வலிக்காதா?

வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்..

உனக்கு வலிக்குமெனில் என்னால் 
தா.....ங்கி கொள்ள முடியாது..   

Thursday, July 12, 2012

புரிந்தது


நீ கண்களை மூடி,
கைகூப்பி, முணுமுணுத்து
கும்பிடும்போதுதான் புரிந்தது
சாமி ஏன் சிலையாய் போனதென்று..




Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.