skip to main
|
skip to sidebar
!♥♥ கோவி♥♥!
காதலும் இன்ன பிறவும்..
Tuesday, November 22, 2011
ஏன்?
உன்னோடு சண்டையிட்டு, பிறகு
சமாதனம் சொல்லி கட்டி அழும்போது
இருக்கும் இன்பம்,
உன்னோடு சிரித்துப்
பேசும்போது கூட
இருப்பதில்லையே ஏன்?
பெருமூச்சு
எதை பார்த்து இப்படி உனக்கு பெருமூச்சு?
சன்னலுக்கு வியர்த்துவிட்டது.!!
சுகம்
உன் பெருமூச்சில் காற்று உணர்ந்திருக்கும்
தென்றலின் சுகத்தை.
Monday, November 21, 2011
அவசியமற்றுப்போனது
புத்தக பரிசளிப்பில் அன்புடன் என்று எழுதி
உன் பெயரையும் எழுதி தந்து சென்றாய்..
உன் பெயர் தவிர
மற்றவை சுவார(அவ)சியமற்றுப்போனது..
நீ
சூரியனை சுற்றியதை காட்டிலும்
பூமி உன்னையே
அதிகம் சுற்றியிருக்கும்.
ஏதாவது?
உன்
சிரிப்போ, சாபமோ, கோபமோ
ஏதாவதொன்றில்
ஏதுமற்றதும்
எதவதாகிவிடுகிறது..
என்னைபோலவே..
கோலங்கள்
புற்கள் மீது நீ போட்ட கோலங்கள்
பூக்களாய் பூத்திருகிறது..
ஈரம்
நீ குளித்தபின் காற்றிடம்
கெஞ்சிகொண்டிருக்கிறது கூந்தலின் ஈரம்
உலர்த்தி விடாதே என்று..
என்னவென்று சொல்வது?
உயிரைக் கொன்று சதை தின்பதை
மாமிசபட்சினி என்றால்,
உயிரை தின்னும் உன்னை
என்னவென்று சொல்வது?
நீ...
சபிக்கபட்ட காதலிடம் இருந்து மோட்சம் கொடுத்தாய் நீ...
நீரூற்று உன் பெயரூற்றி போகிறது...
புள்ளியாக்கபட்ட என் பிம்பத்தின் இறுதி நீ...
சாரல்
மேகம் கொஞ்சிபோனது
உன்னை,
சாரலால்.
பார்வை.
இனிக்க இனிக்க
மிளகாய் தருகிறது
உன் பார்வை.
Thursday, November 17, 2011
மழை
மேகம் அட்சதை தூவி நடத்துகிறது
நம் திருமணத்தை..
Wednesday, November 2, 2011
துளி
மழையின்
ஒவ்வொரு துளியும்
உன்னை பருகவே விழுகிறது..
உனக்காய் நான்
உனக்காய்
படைக்கப்பட்டவைகளில்
முதலாமவன் நான்..
Tuesday, November 1, 2011
வெகுளி
நான் தெரிந்தே உன்மேல் மோத..
நீ தெரியாமல் மோத..
வெகுளியாய் விழித்துக்கொண்டது
காதல், உன் முகத்தில்..
கட்டிகொள்
கட்டிகொள்..
மழை, மேகங்களை
நனைக்காமல் இருக்கட்டும்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கவிதைகள்
என்னைப்பற்றி
கோவி
தொடர்பிற்கு: +919894808794 govivp@yahoo.com
View my complete profile
இதுவரை
►
2015
(5)
►
November
(1)
►
April
(4)
►
2014
(4)
►
December
(4)
►
2013
(20)
►
September
(1)
►
June
(2)
►
May
(5)
►
March
(1)
►
February
(2)
►
January
(9)
►
2012
(31)
►
August
(4)
►
July
(5)
►
June
(11)
►
May
(7)
►
January
(4)
▼
2011
(102)
►
December
(16)
▼
November
(17)
ஏன்?
பெருமூச்சு
சுகம்
அவசியமற்றுப்போனது
நீ
ஏதாவது?
கோலங்கள்
ஈரம்
என்னவென்று சொல்வது?
நீ...
சாரல்
பார்வை.
மழை
துளி
உனக்காய் நான்
வெகுளி
கட்டிகொள்
►
October
(2)
►
September
(2)
►
August
(5)
►
July
(6)
►
June
(9)
►
May
(18)
►
April
(5)
►
March
(7)
►
February
(11)
►
January
(4)
►
2010
(54)
►
December
(3)
►
November
(4)
►
October
(15)
►
September
(26)
►
August
(6)
அதிகம் வாசிக்கப்பட்டவை
புரிந்தது
நீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..
ம்ம்ம்....
நீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..
வெட்கம்
வெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய்? உனக்கு வலிக்காதா? வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...
ஒரே ஒரு முறை
எப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்...
நியாயமா?
பூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...
ஏதாவது?
உன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..
நீ நான்
என்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...
பூக்கள்
பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..
பிசாசு
என் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..
பிரிவு
ஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது "டேய்... போகனுமா?" என்று நீ...
இணைப்பு நிரலிகள்
தமிழ் நண்பர்கள்
!♥♥ கோவி♥♥!
© 2013.